தமிழகத்தில் மொத்தம் 5.66 கோடி வாக்காளர்கள்... திருத்தம் மேற்கொள்ள சிறப்பு முகாம்- சந்தீப் சக்சேனா
சென்னை : தமிழகத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல்படி தற்போது 5.66 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சந்தீப் சக்சேனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது...

இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தபடி, வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று (செவ்வாய்) 234 தொகுதிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், ‘elections.tn.gov.in' என்ற இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்தாண்டு நடந்த சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தை தொடர்ந்து, இந்தாண்டு ஜனவரி மாதம் 10 ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5.62 கோடியாக இருந்தது.
2016 ம் ஆண்டிற்கான சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின் படி, தமிழகத்தில் 5.66 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த பணியின் ஒரு பகுதியாக, கிராமசபைகள், உள்ளாட்சி அமைப்புகள், குடியிருப்போர் நலச்சங்கங்களில் நேற்று முதல் இம்மாதம் 30 ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் பார்வைக்கு வைக்கப்படும். அதில் வாக்காளர்கள் தங்கள் பெயர்களை சரிபார்த்துக் கொள்ளலாம்.
மேலும், இம்மாதம் 20-ம் தேதி மற்றும் அக்டோபர் 4-ம் தேதி ஆகிய இரு ஞாயிற்றுக்கிழமைகளில், வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
இந்த முகாம்களில், வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், தொகுதிக்குள் இடமாற்றம் போன்றவற்றுக்கான விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம்.
இந்த சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிகளை கண்காணிக்க, இந்திய தேர்தல் ஆணையம் 15 ஐஏஎஸ் அதிகாரிகளை சிறப்பு அதிகாரிகளாக நியமித்துள்ளது. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications