வங்கிகளுக்கு தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை- பொதுமக்களுக்கு பாதிப்பு இருக்காதாம்!
சென்னை: வங்கிகளுக்கு வரும் 21 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்களுக்கு விடுமுறை வந்தாலும் பொதுமக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்று அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஆயுத பூஜை, விஜய தசமி, மொஹரம் விடுமுறைகளை தொடர்ந்து அடுத்த வாரம் 5 நாட்கள் பள்ளிகள், வங்கிகள் மற்றும் அரசு துறை நிறுவனங்களுக்கு விடுமுறையாகும்.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் வெங்கடாச்சலம், "தமிழகத்தில் வங்கி வரலாற்றில் முதன்முறையாக தொடர்ந்து 5 நாட்களுக்கு விடுமுறை வருகிறது. இருப்பினும் மக்களின் வசதிக்காக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏடிஎம்கள் இயங்கும்" என்று அவர் கூறினார்.
மேலும் பணம் போடுவதற்கான மின்னணு சேவை மையங்கள் முழு அளவில் செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார். ஏடிஎம்களில் தேவையான அளவுக்கு பணத்தை வைக்க மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வங்கிகளை கேட்டு கொண்டிருப்பதாக வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications