நெருங்குகிறது டிச.30... நீடிக்கிறது பணத்தட்டுப்பாடு... தளருமா கட்டுப்பாடுகள்?
நாடு முழுவதும் வங்கிகளில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் தொடருகிறது. இதனால் பணத்தட்டுப்பாடு என்பது மேலும் சில மாதங்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது.
சென்னை: ரூபாய் நோட்டு செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால் நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு பொதுமக்களை பாடாய்படுத்தி வருகிறது. பிரதமர் மோடி அறிவித்த 50 நாட்கள் கெடு முடிவடைய 5 நாட்களே உள்ள நிலையில் பணத்தட்டுப்பாடு தொடர் கதையாகத்தான் இருக்கிறது. வங்கிகளில் பணம் எடுப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மேலும் சில மாதங்களுக்கு நீடிக்கவே வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என நவம்பர் 8-ந் தேதி பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்தார். அத்துடன் வங்கிகளில் பணம் எடுப்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

ஒரு வாரத்துக்கு ரூ24,000 மட்டுமே ஒருவர் எடுக்க முடியும் என அறிவிக்கப்பட்டது. ஏடிஎம் மையங்களிலும் ரூ2,000 மட்டுமே கிடைக்கும் எனவும் அறிவிக்கபட்டது.
இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் பெரும்பாலான ஏடிஎம் மையங்கள் மூடப்பட்டன. திறந்துகிடக்கும் ஏடிஎம் மையங்களில் மக்கள் ரூ2,000 எடுப்பதற்காக நீண்ட கியூ வரிசைகளில் காத்துகிடக்கும் அவலம் தொடர் கதையாகிறது.
டிசம்பர் 30-ந் தேதிக்குள் நிலைமை சீராகிவிடும் என பிரதமர் மோடி அறிவித்து வருகிறார். ஆனால் டிசம்பர் 30-ந் தேதிக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. வங்கிகளில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் தொடருகிறது; ஏடிஎம் மையங்கள் முழுமையாக இயங்காத நிலை நீடிக்கிறது.
இதனால் டிசம்பர் 30-ந் தேதிக்குப் பின்னரும் கூட தற்போதைய பணத்தட்டுப்பாட்டு நிலைமை தொடரவே வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications