வியப்பூட்டுது செங்கல்பட்டு.. 19ம் தேதி தேர்தல், மறுநாளே ரெடியா இருங்க மக்களே.. கலெக்டர் சர்ப்ரைஸ்
செங்கல்பட்டு: 100 சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில், செங்கல்பட்டு மாவட்டத்திலும் ஒரு சர்ப்ரைஸ் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வரும் 19ம் தேதி தேர்தல் நடக்க போகிறது.. அந்தவகையில் பிரச்சாரங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.. இந்த முறை 100 சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தி மாவட்டந்தோறும் விழிப்புணர்வு பிரச்சாரங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

விழிப்புணர்வு: 100 சதவீத வாக்குப்பதிவு கோரி, புதுவிதமான சலுகைகளையும் மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்து வருகின்றன. இந்த விழிப்புணர்வு நிகழ்வுகளில் பள்ளி, கல்லுாரி மாணவர்களும் ஈடுபட்டு வருகிறார்கள். பஸ் ஸ்டாண்டு , ரயில்வே ஸ்டேஷன் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பல்வேறு வடிவங்களில் 100 சதவீத வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில், செங்கல்பட்டு மாவட்டத்திலும் அதிரடி அறிவிப்பு வெளியாகி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தை பொறுத்தவரை, சோழிங்கநல்லூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர் -- தனி, மதுராந்தகம் -- தனி ஆகிய சட்டசபை தொகுதிகளில், தேர்தல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வாக்குப்பதிவு குறைவாக பதிவாகிறது.
தள்ளுபடி: எனவே, இதனை அதிகரிக்கும் வகையில் வீடு வீடாக பூத் சிலிப் வழங்கும் பணிகளும் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், 19ம் தேதியன்று, ஓட்டுப்போட்டால், மறுநாள் ஓட்டல்களில் 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்...
அதாவது, ஏப்ரல் 19-ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வாக்காளர்கள் ஏப்ரல் 20-ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள உணவகங்களுக்கும், மாமல்லபுரத்தில் உள்ள உணவகங்களுக்கும் சாப்பிடச் செல்லும் வாக்காளர்களின், தங்கள் விரலில் மை இடப்பட்டிருப்பதை காட்டினால், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட உணவக உரிமையாளர்கள் சார்பில் வாக்காளர்களுக்கு அதிரடி ஆஃபர் கொடுக்கப்பட்டுள்ளது.. அதன்படி 5% வரி தள்ளுபடி செய்யப்படும்.
கலெக்டர்: இந்த தொகுதியில் 100% வாக்குப் பதிவானதை அனைத்து வாக்காளர்களும் உறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.. பொதுமக்களுக்கு வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள இந்த இந்த அறிவிப்பானது, மாவட்ட மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அத்துடன், பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications