மீனவர்கள் ஐவரும் சொந்த ஊர் வந்து சேர்ந்தனர்! தோளில் தூக்கி வைத்து உறவினர்கள் ஊர்வலம்
ராமேஸ்வரம்: இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரும் டெல்லியிலிருந்து விமானம் மூலம் நள்ளிரவு சென்னை வந்து இன்று மதியம் தங்களது சொந்த ஊரான தங்கச்சி மடம் வந்து சேர்ந்தனர். அவர்களுக்கு ஊர்மக்கள், உற்றார், உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
போதை மருந்து கடத்தியதாக கூறி, இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத், லாங்லெட் ஆகியோருக்கு அதிபர் ராஜபக்சே, இரு நாட்களுக்கு முன்பு பொது மன்னிப்பு வழங்கி விடுவித்தார்.

அதை தொடர்ந்து அவர்கள் 5 பேரும் நேற்று விமானம் மூலம் டெல்லி அழைத்து செல்லப்பட்டனர். டெல்லியில் அவர்கள், வெளியுறவுத் துறை நடைமுறைகளை முடித்துக் கொண்டு சென்னைக்கு நள்ளிரவு அழைத்து வரப்பட்டனர்.
Fishermen receive heroes welcome at Rameswaram.Now giving thanks to God for bringing them home after 3 yes. @ibnlive pic.twitter.com/ciH0nF7LMm
— anna isaac (@anna_isaac) November 21, 2014 சென்னை விமான நிலையத்தில் காத்திருந்த அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க 5 மீனவர்களையும் வரவேற்றனர். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், தமிழக அமைச்சர்கள், வளர்மதி, சுந்தரராஜ், ஜெயபால் ஆகியோரும் 5 மீனவர்களை நேரில் வரவேற்றனர்.

இதன்பிறகு, மீனவர்கள் 5 பேரும் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி புறப்பட்டு சென்றனர். அங்கிருந்து இன்று நன்பகல் 12 மணியளவில் அவர்கள் சொந்த ஊரான தங்கச்சி மடம் சென்று அடைந்தனர். ஊர்க்காரர்களும், உறவினர்களும் மீனவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மீனவர்களை தோளில் தூக்கி வைத்துக் கொண்டு ஊர்வலம் சென்றனர், பொன்னாடைகளை போர்த்தினர், மாலைகளை சூடினர்.

பலரும் உணர்ச்சி மிகுதியால் நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆயிரம் வாலா சரவெடிகளின் சத்தத்தால் தங்கச்சிமடமே கோலாகலம் கண்டது. வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. தமிழகத்தின் ஒட்டுமொத்த மீடியாக்களின் பிரதிநிதிகளும் தங்கச்சி மடத்தில் குவிந்துள்ளன.
மீன் கொடுத்து கொண்டாடிய தமிழக பாஜக
உலக மீனவர் தினம் இன்று கொண்டாடப்பட்டது. தூக்கு கயிற்றில் இருந்து 5 மீனவர்கள் விடுதலையானதையொட்டி பாரதிய ஜனதா கட்சியினர் நூதனமான முறையில் இந்த விழாவை கோலாகலமாக கொண்டாடினார்கள்.

சென்னை விவேகானந்தா இல்லம் அருகே ‘‘மீன் உணவு உண்ணும் விழா'' என்ற பெயரில் கொண்டாடப்பட்டது. விழா பந்தலில் வஞ்சீரம், மாவலாதி, சங்கரா, அயிரை, இரால், நண்டு, நெத்திலி, கணவாய் ஆகிய 8 விதமான மீன்கள் வறுத்து வைக்கப்பட்டு இருந்தது. சராசரியாக ஒவ்வொரு வகை மீனிலும் 200 கிலோவுக்கு குறையாமல் வறுத்து வைக்கப்பட்டு இருந்த இந்த மீன் வாசனை அந்த பகுதியில் கமகமத்தது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாநில பாரதிய ஜனதா மீனவர் அணி செயலாளர் சதீஷ் செய்து இருந்தார். விழாவை தொடங்கி வைத்து மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பொது மக்களுக்கு மீன் உணவுகளை இலவசமாக வழங்கினார். சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் விதவிதமான மீன்களை ருசித்து மகிழ்ந்தனர்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications