மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் அட்டகாசம்... 5 பேர் கும்பல் 17 பவுன் சங்கிலிகளை பறித்துத் தப்பியது
தர்மபுரி: தர்மபுரி அருகே 5 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் ஓடும் ரயிலில் பெண்களிடம் 17 பவுன் தங்கச் சங்கிலிகளைப் பறித்துக கொண்டு தப்பிய செயல் பரபரப்பை ஏற்படுத்தியது.
மயிலாடுதுறையில் இருந்து மைசூர் வரை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் நேற்று காலை 7 மணி அளவில் தர்மபுரி அருகே காரவள்ளி என்ற இடத்தில் கொண்டிருந்த போது திடீரென ரயிலின் அபாய சங்கிலி இழுக்கப்பட்டதால் ரயில் நின்றது.
இதனையடுத்து, ரயில் பணியாளர்கள் குறிப்பிட்ட பெட்டிக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது ரயில் நிறுத்தப்பட்டவுடன் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் நுழைந்த 5 பேர் கொண்ட கும்பல், 3 பெண்களிடம் இருந்து தங்க சங்கிலிகளை மின்னல் வேகத்தில் பறித்துவிட்டு தப்பியோடியது தெரியவந்தது.
பவானி, மஞ்சு, சரஸ்வதி ஆகிய அந்த பெண்களிடம் இருந்து 17 சவரன் தங்கச் சங்கிலிகள் பறிக்கப்பட்டன. இந்நிலையில், சங்கிலிகளை பறிகொடுத்த பெண்கள் தர்மபுரி ரயில் நிலையத்தில் இறக்கிவிடப்பட்டனர்.
அவர்கள் தர்மபுரி ரயில் நிலைய காவல்துறையினரிடம் அளித்த புகாரின் பேரில், கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
ஓடும் ரயிலில் நடந்த இந்த துணிகர சங்கிலிப் பறிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications