ஜெயக்குமார் உள்பட மேலும் 5 அமைச்சர்கள் ஓ.பி.எஸ் அணிக்குத் தாவுகிறார்கள்?
ஜெயக்குமார் உள்பட மேலும் 5 அமைச்சர்கள் முதல்வர் ஓ.பி.எஸ் அணிக்குத் தாவப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உள்பட மேலும் 5 அமைச்சர்கள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு வரவுள்ளதாக பரபரப்பு எழுந்துள்ளது.
இன்று கூவத்தூரில் நடந்த சசிகலாவின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த ஐந்து பேரும் கலந்து கொள்ளவில்லை. இதனால் அவர்கள் அணி மாறப் போவதாக தகவல்கள் பரவியுள்ளன. அவர்கள் இன்று இரவு அல்லது நாளை காலையில் முதல்வர் ஓ.பி.எஸ் இல்லத்திற்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று கூவத்தூரில் நடந்த சசிகலாவின் ஆலோசனைக் கூட்டத்தின்போது மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின், மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, நகராட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆகியோர் பங்கேற்கவில்லை.
இவர்கள் அணி மாறும் மன ஓட்டத்தில் இருப்பதாக பேசப்படுகிறது. இவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை. இதில் ஜெயக்குமாரைக் காணவில்லை என்று போலீஸில் இன்று ஒரு புகார் தரப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர்கள் அணி மாறப் போகிறார்களா அல்லது என்ன காரணத்தால் இவர்கள் சசிகலா கூட்டத்திற்கு வரவில்லை என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications