50 தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் 500க்கு உள்ளேதான்.. டிரெண்ட் மாறாதா என திமுக ஏக்கம்
சென்னை: அதிமுக முன்னணியில் இருப்பதாக வாக்கு எண்ணிக்கை டிரெண்ட் காட்டிவரும் போதும், 50 தொகுதிகளில் அதிமுக மற்றும் திமுக நடுவே சுமார் 500 வாக்குகளுக்கு உள்ளேயே வித்தியாசம் இருப்பதாக வரும் செய்திகள் திமுகவினரை உற்சாகப்படுத்தியுள்ளன.
வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்த காலை 8 மணி முதலே அதிமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து அதிமுகவே முன்னணியில் இருந்து வந்தது. காலை 11.30 மணியளவிலும் அதே நிலைமை தொடர்ந்தது. எனவே ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

அதேநேரம், சுமார் 50 தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுக நடுவேயான வாக்கு வித்தியாசம் 50 தொகுதிகளுக்கு உள்ளேதான் இருந்து வருகிறது. இதில் எந்த கட்சி பக்கம் டிரெண்ட் மாறும் என்பதை பொறுத்து, வெற்றி தோல்வி அமையும். திமுகவினர் தங்கள் பக்கம் டிரெண்ட் மாறாதா என்று ஏங்கிக்கொண்டுள்ளனர்.
ஆனால், இதில் 25 தொகுதிகள் திமுகவுக்கும், 25 தொகுதிகள் அதிமுகவுக்கும் என பிரிந்து முன்னணி பெற்றாலும்கூட திமுகவால் ஆட்சியமைக்க முடியாது என்பதே நிதர்சனம்.












Click it and Unblock the Notifications