ஒருவர் அதிகபட்சம் 50 வாக்குக்கு பணம் தரவேண்டும்.. ஆர்கே நகரில் அரசியல் கட்சிகள் டாஸ்க்!
ஒருவர் அதிகபட்சம் 50வாக்குக்கு பணம் தரவேண்டும் என ஆர்கே நகரில் அரசியல் கட்சிகள் ஏற்பாடு செய்துள்ளன.
Recommended Video
சென்னை: ஆர்கே நகரில் ஒருவர் அதிகபட்சம் 50 வாக்குக்கு பணம் தரவேண்டும் என அரசியல் கட்சிகள் ஏற்பாடு செய்துள்ளன.
சென்னை ஆர்கே நகரில் வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் படுபிசியாக உள்ளன.
தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிரலையில் அரசியல் கட்சிகள் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகின்றன. கம்பெனி துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
ரூ.100 கோடி இறைப்பு
இந்நிலையில் ஆர்கே நகரில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆர்கே நகரில் 100 கோடி ரூபாய் களமிறக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
50 வாக்குக்கு பணம் தர டாஸ்க்
ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் பணம் தர சராசரியாக 50 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் ஒவ்வொருவரும் அதிகபட்சம் 50 வாக்குக்கு பணம் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
பட்டியல் போட்டு பணம்
பட்டியல் போட்டு பணம் விநியோகம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஆர்கே நகரில் கொட்டும் பணமழையால் இம்முறையும் தேர்தல் ரத்தாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இம்முறையும் ரத்தா?
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதிக்கு ஏற்கனவே தேர்தல் அறிவிக்கப்பட்டு வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதாக எழுந்த புகாரில் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் இடைத்தேர்தல் ரத்தாகுமோ என்ற சந்தேககம் எழுந்துள்ளது.