வேலூர்: சாக்லேட் கொடுத்து 3 வயது சிறுமியை சீரழித்த 55 வயது காமுகன் தலைமறைவு
ராணிப்பேட்டை: வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அருகே மூன்று வயது சிறுமிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த காமுகனை போலீசார் தேடி வருகின்றனர். கோவிந்தசாமி (55) என்ற அந்த காமுகன் ராணிப்பேட்டை அருகே மலைமேடு பகுதியில் மளிகைக் கடை வைத்துள்ளான்.
அவனது கடைக்கு கூலித்தொழிலாளி ஒருவரின் மூன்று வயது மகள் கடந்த ஞாயிறன்று இரவு 8 மணிக்கு மளிகைக்கடை அருகே தனது பாட்டி வீட்டருகே விளையாடிக்கொண்டிருந்தார்.

அப்போது அந்த சிறுமியை அழைத்து சாக்லெட் கொடுத்து விளையாடிய கோவிந்தசாமி சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
விளையாடப்போன சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததைக் கண்ட சிறுமியின் அத்தை மளிகைக்கடைக்கு சென்று தேடியுள்ளார்.
கோவிந்தசாமியின் வீட்டிற்குள் இருந்து சிறுமியின் அழுகுரல் கேட்கவே கதவை வேகமாக தட்டியுள்ளார். இதனையடுத்து சிறுமியை விட்டுவிட்டு கோவிந்தசாமி தலைமறைவாகிவிட்டார்.
இதனையடுத்து சிறுமியை அழைத்துக்கொண்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்துள்ளார். இதில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது.
இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர் கோவிந்தசாமியின் மீது மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
வழக்குப் பதிவு செய்த போலீசார் சிறுமியை பலாத்காரம் செய்துவிட்டு மனைவியுடன் தலைமறைவான கோவிந்தசாமியை தேடி வருகின்றனர். சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications