For Daily Alerts
Just In
தமிழக சட்டசபையில் செம்மலை, ராஜன்செல்லப்பா உட்பட 6 மாற்றுத் தலைவர்கள் பெயர் அறிவிப்பு
சென்னை: சட்டசபையில் சபாநாயகர், துணை சபாநாயகர் இல்லாத நேரத்தில் செயல்படும் 6 மாற்றுத் தலைவர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிய அரசு அமைந்த பிறகு 15-வது சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் கடந்த 16-ந் தேதி ஆளுநர் ரோசய்யா உரையுடன் தொடங்கியது. மறுநாள் மறைந்த எம்எல்ஏக்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சட்டசபை அலுவல்கள் ஒத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு சட்ட சபைக் கூட்டத் தொடர் சபாநாயகர் தனபால் தலைமையில் மீண்டும் கூடியது. அப்போது ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் விவாதம் தொடங்கியது.
சட்டசபையில் சபாநாயகர் இல்லாத நேரத்தில் செயல்படும் 6 மாற்றுத்தலைவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. செம்மலை, ராஜன் செல்லப்பா, சின்னராஜ், நரசிம்மன், தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் ஆகிய 6 பேர் மாற்றுத் தலைவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
Comments
English summary
6 alternate assembly leaders name has been announced for TN assembly.
Story first published: Monday, June 20, 2016, 12:18 [IST]