பெங்களூரு சிறையில் மட்டுமல்ல புழல் சிறையிலும் விதிமீறல்... எப்படி தெரியுமா?
புழல் சிறையில் விதியை மீறி பயன்படுத்திய 6 செல்போன் மற்றும் பேட்டரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை : திருவள்ளூரை அடுத்த புழல் சிறையில் கைதிகள் பயன்படுத்தி வந்த 5 செல்போன் மற்றும் பேட்டரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பெங்களூரு சிறையில் நடைபெறும் விதிமீறல்கள் காட்சிகள் கடந்த இரண்டு நாட்களாக பகீர் கிளப்பி வருகிறது. பணம் இருந்தால் சிறையிலும் நினைத்தபடி வாழலாம் என்பதை அந்தக் காட்சிகளும், புகைப்படங்களும் துகிலுரித்துக் காட்டின. இந்நிலையில் புழல் சிறையிலும் விதிமீறல்கள் நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது, ஆனால் இந்த விதிமீறல்களைச் செய்தது சாதாரணக் கைதிகள் தான்.

ஜெயராமன் சிறைக் கண்காணிப்பாளர் ஜெயராமன் தலைமையில் புழல் சிறையில் திடீரென நேற்று இரவு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்போது கைதிகள் சிலர் செல்போன் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் விசாரணை நடத்திய போது மண்ணுக்குள் புதைக்கப்பட்ட மேலும் சில செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதே போன்று செல்போன் பேட்டரிகள் 4, 3 சிம்கார்டுகளும் கைதிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து 100க்கும் மேற்பட்ட கைதிகளிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்காணிப்புகளை மீறி சிறைக்குள் செல்போன் வந்தது எப்படி, கைதிகள் யாருடனெல்லாம் பேசினார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிறையில் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து சிறை நிர்வாகம் புழல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் புழல் சிறையில் பாகிஸ்தான் கொடி வீசப்பட்டதையடுத்து பரபரப்பு கிளம்பியது, இந்நிலையில் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் சிறையில் இருந்து ஏதேனும் சதித்திட்டம் தீட்டப்படுகிறதா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications