உக்கிர ஆட்டம் போட்ட ”ஓகி” உதவியும் செய்திருக்கு.. ஒரே நாளில் 6 அடி உயர்ந்த முல்லைப் பெரியாறு அணை!
ஓகி புயல் கொட்டிச் சென்ற மழையால் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடியாக உயர்ந்துள்ளது.
குமுளி: கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் உக்கிர தாண்டமவாடிவிட்டு லட்சத் தீவுகளை உருக்குலைக்கப் போயிருக்கிறது ஓகி புயல். இருப்பினும் ஓகி கொண்டு வந்த மழையால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்ந்துள்ளது.
கன்னியாகுமாரி அருகே கடலில் மையம் கொண்டிருந்தது ஓகி புயல். இதனால் மணிக்கு 80 கி.மீ வேகத்தில் புயல் காற்று வீசியது. இப்புயலால் 20,000க்கும் அதிகமான மரங்கள் குமரி மாவட்டத்தில் வேரோடு வீழ்ந்தன.

இப்போது ஓகி புயல் வங்கக் கடலில் இருந்து அரபிக் கடலுக்குள் போய் லட்சத்தீவை படுபயங்கரமாக அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. ஓகி புயல் பெரும் துயரத்தை தந்திருந்தாலும் அது கொண்டு வந்த மழை நன்மையையும் கொடுத்திருக்கிறது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை ஒரே நாளில் 6 அடி உயர வைத்துள்ளது ஓகி தந்த மழை. தற்போது முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் 127.9 அடியாக உள்ளது.
இதனிடையே பம்பை நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சபரிமலை பக்தர்கள் நிறுத்தியிருந்த வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சபரிமலை பக்தர்கள் இரவில் மலையேற வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications