100 வயதான தாயார் இறந்ததால், 66 வயது மகன் தற்கொலை? ஈரோட்டில் வினோத சம்பவம்
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் 100 வயதான தயார் இறந்ததால், 66 வயது மகன் தற்கொலை செய்துகொண்டதாக வினோதமான தகவல் வெளியாகியுள்ளது.
அந்தியூர் அருகிலுள்ள வரட்டுப்பள்ளம் அணை வனப்பகுதியில், வனத்துறையினர் ரோந்து சென்றுள்ளனர். அப்போது அருகே உள்ள மரத்தில் ஆண் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிவாறு இருந்ததை கண்ட வனத்துறையினர், இது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், இறந்தவர் யார் என்பது அடையாளம் தெரியாத நிலையில், சடலத்தை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீஸார் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர் அந்தியூர் பனங்காட்டூரை சேர்ந்த பொம்மநாயக்கர்(66). என்பது தெரியவந்தது.
பொம்மநாயக்கரின், 100 வயதான தாயார் சில தினங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால், கடந்த சில நாட்களாக பொம்மநாயக்கர் சோகத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவரது சடலம் தூக்கில் தொங்கியபடி வப்பகுதியில் உள்ள மரத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. தயார் இறந்த சோகத்திலேயே பொம்மநாயக்கர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.