வேலூர் ரத்தினகிரியில் அடுத்தடுத்து 3 கார்கள் மோதல்... 7 பேர் பலி
வேலூர் மாவட்டம் ரத்தினகிரியில் வேகமாக வந்த கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 7 பேர் பலியாகினர்.
Subscribe to Oneindia Tamil
வேலூர்: வேலூர் அருகே 3ரத்தினகிரியில் வேகமாக வந்த 3 கார்கள் மோதி கொண்ட விபத்தில் 7 பேர் பலியாகிவிட்டனர்.
ரத்தினகிரி நெடுஞ்சாலையில் இன்று காலை 3 கார்கள் அதிவேகத்தில் சென்று கொண்டிருந்தன. அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த ஒரு கார் மற்றொரு காருடன் மோதியது. அந்த கார் அதன் முன்னே சென்ற மற்றொரு காருடன் மோதியது.

இதனால் அடுத்தடுத்து விபத்து நிகழ்ந்தது. இதில் கார்கள் உருக்குலைந்தன. விபத்தில் முதலில் 3 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. அதன் பின்னர் பலி எண்ணிக்கை அதிகரித்து தற்போது 7 பேராக உயர்ந்துள்ளது.
காயம் அடைந்த 4 பேர் மீட்கப்பட்டு வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுடைய நிலை கவலைக்கிடமாக உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications