பெட்ரோல் குண்டு வீசிய 7 தி.வி.க.வினர் அமைப்பில் இருந்து சஸ்பென்ட்
சேலம்: சென்னை மற்றும் சேலத்தில் பெட்ரோல் குண்டு வீசியதாக கைது செய்யப்பட்டுள்ள திராவிடர் விடுதலைக் கழக நிர்வாகிகள் 7 பேரை அந்த அமைப்பு சஸ்பென்ட் செய்துள்ளது.
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திராவிடர் விடுதலை கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் விடுதலை க. ராசேந்திரன், வன்முறை என்பது திராவிடர் விடுதலைக் கழகத்தின் அணுகுமுறைக்கு எதிரானது. வன்முறை சார்ந்த போராட்ட வடிவங்கள் திராவிடர் விடுதலை கழகத்துக்கு உடன்பாடானது அல்ல.
பெட்ரோல் குண்டு வீசியதாக கைது செய்யப்பட்டு சென்னை மற்றும் சேலத்தில் கைது செய்யப்பட்டுள்ள 7 பேரும் அமைப்பில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி இறுதி முடிவு எடுப்போம்.
திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணியை சட்டவிரோதமாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது என்றார்.












Click it and Unblock the Notifications