நடுக் கடலில் தாக்கப்பட்ட 7 தமிழக மீனவர்கள்.. தாக்கியது இலங்கை கடற் கொள்ளையர்களா?
நாகப்பட்டனம்: நாகப்பட்டனத்தை் சேர்ந்த 7 மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றபோது நடுக் கடலில் வைத்து தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர். இவர்களை கடற் கொள்ளையர்கள் தாக்கியிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.
இந்தக் கடற் கொள்ளையர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. காயமடைந்தவர்களில் 2 பேருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களை நாகப்பட்டனம் அரசு மருத்துவமனையில் போலீஸார் சேர்த்துள்ளனர்.

இந்த மீனவர்கள் நம்பியார் பகுதியைச் சேர்ந்தவர்கள். கோடியக்கரையிலிருந்து தென் கிழக்கே சில மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது தாக்குதலுக்குள்ளாகினர். வெள்ளிக்கிழமை இரவு இச்சம்பவம் நடந்துள்ளது.
5 பேர் கொண்ட கும்பல் தமிழக மீனவர்களின் படகில் குதித்து மரக் கட்டைகளால் தாக்கியுள்ளனர். பின்னர் மீனவர்கள் வைத்திருந்த மீன், மீன் வலை, ஜிபிஎஸ் கருவி உள்ளிட்டவற்றைப் பறித்துக் கொண்டு தப்பி விட்டனர்.
காயமடைந்த மீனவர்கள் தப்பிப் பிழைத்து கரைக்கு வந்து சேர்ந்தனர். அவர்களில் தலையில் காயம் ஏற்பட்டிருந்த மீனவர்கள் மாணிக்கவேல் மற்றும் தேவேந்திரன் ஆகியோர் உடனடியாக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications