பொள்ளாச்சி: அரசு பஸ் - லாரி மோதி விபத்து 8 பேர் பலி
கோவை: பொள்ளாச்சி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். 10 பேர் படுகாயமடைந்துள்ளனர் காயமடைந்த அனைவரும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி ஒரு சரக்கு லாரி வந்து கொண்டிருந்தது. இதேபோல கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இன்று மாலை 4.30 மணியளவில் பல்லடம் சாலை கருமாபுரம் விலக்கில் அரசு பேருந்தும் சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் அரசு பேருந்தின் முன் பக்கம் அப்பளம் போல நொறுங்கியது. பேருந்தில் பயணம் செய்த 8 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர். தகவலறிந்த உடன் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் காயமடைந்த பயணிகளை மீட்டு பொள்ளாச்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அரசு பேருந்தும் லாரியும் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பொள்ளாச்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications