புழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை.. 8 காவல் துறை அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்
சென்னை: புழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக வெளியான புகைப்படங்களை தொடர்ந்து சிறைத் துறை ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா அந்த சிறையிலிருந்து தலைமை வார்டன் மற்றும் வார்டன்கள் 8 பேரை இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பாகிஸ்தானை சேர்ந்த நபர் உள்ளிட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ள புழல் சிறையில் 18 டிவிகளும் 2 எப் எம் ரேடியோக்களும் கைப்பற்றப்பட்டன. சிறை விதிகளை மீறி இவர்களிடம் இருந்து 2 செல்போன்கள், சிம் கார்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் சீருடை இல்லாமல் சாதாரண உடை அணிந்த படி பாகிஸ்தான் கைதி சுற்றித் திரியும் புகைப்படங்களும் சொகுசு வசதிகளுடன் நட்சத்திர ஓட்டல் உணவுகள் அவரது அறையில் இருக்கும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகியது.

ஒரு மாதத்துக்கு முன்னர்
இதைத் தொடர்ந்து சிறைத் துறை ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா புழல் சிறையில் ஆய்வு மேற்கொண்டார். பாகிஸ்தான் கைதியின் அறையில் இருந்த நட்சத்திர ஹோட்டல் உணவு வகைகள் ரம்ஜான் பண்டிக்கைக்காக சிறப்பு அனுமதி பெற்று வரழைக்கப்பட்டவை. இந்த புகைப்படங்கள் ஒரு மாதத்துக்கு முன்னர் எடுக்கப்பட்டது என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

செல்போன் நடவடிக்கை
இதுகுறித்து அமைச்சர் சிவி சண்முகம் கூறுகையில் சிறைச் சாலையில் முதல் வகுப்பினர் டிவி வைத்துக் கொள்ளலாம், விருப்பப்படி உடைகளை போட்டு கொள்ளலாம் என்றார். மேலும் சிறையில் செல்போன் பயன்பாடு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பெரும் சர்ச்சை
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எச் ராஜாவும் போலீஸாரை புழல் சிறை விவகாரத்தை வைத்தே கேவலமாக பேசினார். இதையடுத்து புழல் சிறையில் உள்ள 8 அதிகாரிகளை இடமாற்றம் செய்து சிறைத் துறை ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா உத்தரவு பிறப்பித்தார்.

எங்கு இடமாற்றம்
புழல் மத்திய சிறையின் முதன்மை தலைமை வார்டன்கள் விஜயராஜ் ஊட்டிக்கும், கணேசன் செங்கத்துக்கும், வார்டன்கள் பாவாடைராயர், செல்வகுமார் ஆகியோர் வேலூர் மத்திய சிறைக்கும், ஜெபஸ்டீன் செல்வகுமார், பிரதாப் சிங் ஆகியோர் கோவை மத்திய சிறைக்கும், சிங்காரவேலன் சேலம் மத்திய சிறைக்கும், சுப்பிரமணி திருச்சி மத்திய சிறைக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் உடனடியாக தங்களுக்கு மாற்றப்பட்டுள்ள இடத்தில் பணியில் சேரவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications