Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாகை அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 8 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்

கோடியக்கரை அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த நாகப்பட்டினம் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டினம்: கோடியக்கரை அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.

நாகை அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த ரவி பாலன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் பாலமுருகன், வீரையன், கண்ணையன், அண்ணாத்துரை , அமிர்தலிங்கம், குமரன், சித்ரவேல், மாரியப்பன் ஆகிய 8 மீனவர்கள் கடந்த 16ம் தேதி நள்ளிரவு மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

8 TN fishermen arrested by Lankan Navy

நேற்றிரவு நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்களை சிறைபிடித்து காங்கேசன் துறைமுகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது .

நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் நகர காவல் நிலைய சரகம் கீச்சாங்குப்பம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து 17ஆம் தேதி 1 மணிக்கு ஆரியநாட்டுத்தெருவைச் சேர்ந்த ரவிபாலன்,42, சின்னதம்பி என்பவருக்கு சொந்தமான IND TN 06 MM 180.என்ற விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றனர்.

அமிர்தலிங்கம்,குமரன், 30 சக்திவேல், அண்ணாதுரை பக்கிரிசாமி, வீரையன், பாலமுருகன், ராஜேஸ், மாரியப்பன் ஆகியோர் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

நேற்று 9 மணியளவில் கோடியக்கரைக்கு தென்கிழக்கே 42 நாட்டிக்கல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்தனர். காங்கேசன் துறை கடற்படை முகாமில் விசாரணை நடைபெற்று வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+