குறைந்த மதிப்பெண் பெற்றதால் பெற்றோர் கண்டிப்பு- 8 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை: தேர்வில் குறைவான மதிப்பெண்களைப் பெற்றதால் பட்டினப்பாக்கத்தில் 8 ஆம் வகுப்பு மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மந்தைவெளி 2 ஆவது டிரஸ்ட் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் முத்துக்குமார். இவர் பள்ளிக்கூடம் ஒன்றில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் கரோலின்.
அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இவர் 8 ஆம் வகுப்பு படித்து வந்தார். தேர்வுகளில் குறைவான மார்க் பெற்றதால் கரோலினை பெற்றோர் கண்டித்ததுடன் நன்றாக படிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார்.
நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கரோலின் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி பட்டினப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications