செங்கல்பட்டில் பரபரப்பு... சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலிருந்து 9 பேர் ஓட்டம்... 6 பேர் சிக்கினர்!
செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகரில் உள்ள சிறுவர் சீர்திருத்ப் பள்ளியிலிருந்து 9 சிறார்கள், வாட்ச்மேனைத் தாக்கி விட்டுத் தப்பி ஓடினர். அதில் 6 பேரை போலீஸார் மீண்டும் பிடித்து விட்டனர். 3 பேரைத் தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு தாலுகா அலுவலக வளாகத்திற்குள் சிறுவர் சீர்திருத்தபள்ளி உள்ளது. பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு கைதான 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் இங்கு அடைக்கப்பட்டு உள்ளனர். சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 36 சிறுவர்கள் இங்கு அடைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

2 நாட்களுக்கு முன்பு இரவு 10.30 மணி அளவில் 9 சிறுவர்கள் தாங்கள் அடைக்கப்பட்டு இருந்த அறையின் ஜன்னல் கம்பிகளை உடைத்து வெளியே வந்தனர். பின்னர் பிரதான நுழைவு வாயில் அருகே வந்து நைசாக வெளியே செல்ல முயன்றனர். அப்போது அங்கு காவல் பணியில் இருந்த காவலாளி செந்தில் மற்றும் சமையல்காரர் முரளி ஆகியோர் அவர்களை தடுத்து விசாரித்தனர். அப்போது திடீரென்று அந்த சிறுவர்கள் அவர்கள் இருவரையும் தாக்கிவிட்டு வெளியே தப்பி ஓடி விட்டனர்.
இதுகுறித்து சீர்திருத்த பள்ளியின் கண்காணிப்பாளர் ராமநாதன், செங்கல்பட்டு டவுன் போலீசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து காஞ்சீபுரம் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில் செங்கல்பட்டு இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் தப்பி ஓடிய சிறுவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டன.
நேற்று இரவு 11 மணி அளவில் செங்கல்பட்டு மற்றும் புலிப்பாக்கம் மலைப்பகுதிகளில் சுற்றித்திரிந்த 5 சிறுவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். நேற்று காலையில் ஒரு சிறுவன் பிடிபட்டான். மற்ற 3 பேரை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள். கைது செய்யப்பட்ட 6 சிறுவர்களையும் போலீசார் செங்கல்பட்டு சிறார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பின்னர் சிறுவர் சீர்திருத்தபள்ளியில் அடைத்தனர்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications