கோவையில் டாஸ்மாக் கடை சூறை.. துண்டுப் பிரசுரமும் விநியோகம்.. 9 பேர்கைது
கோவை: கோவையில் டாஸ்மாக் மதுபானக் கடையை சூறையாடியதாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மேட்டுப்பாளையம் ரோடு புதிய பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று மாலை 5.30 மணியளவில் இந்த கடைக்கு வந்த 9 பேர் கொண்ட கும்பல் மது விற்பனைக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.

மேலும் துண்டு பிரசுரங்களையும் அவர்கள் விநியோகம் செய்தனர். அதில், "குடி கெடுக்கும் அரசிடம் கெஞ்சியது போதும். கெடு விதிப்போம் ஆகஸ்ட் 31" என்றும், "குடிகெடுக்கும் அரசிடம் கெஞ்சாதே, தடுக்க வரும் போலீசுக்கு அஞ்சாதே, மூடு கடையை. எவன் வருவான் பார்ப்போம். நம் ஊரில் இனி டாஸ்மாக் கிடையாது" என தலைப்பிட்டு மது விற்பனைக்கு எதிராக 4 பக்கம் அச்சிடப்பட்டிருந்தது.
தொடர்ந்து விற்பனையாளர் காசிநாதனை எச்சரித்து கடையை விட்டு வெளியேற்றிய அவர்கள், கடையை சூறையாடினர். கடையில் இருந்த சுமார் 1000 மதுபாட்டில்களை கடைக்கு வெளியே எரிந்த அவர்கள், மதுபாட்டில்களுக்கு தீ வைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து புரட்சிகர இளைஞர் படை என்று கூறிக்கொண்ட அந்த 9 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான சுமார் ஆயிரம் மதுபாட்டில்கள் சேதமடைந்தன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
-
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை












Click it and Unblock the Notifications