ஏற்காடு தேர்தல்- அதிமுக பிரசாரக் குழுவில் மேலும் ஒரு அமைச்சர் உள்பட 9 பேர் சேர்ப்பு

இதன் மூலம் பிரசார பொறுப்பாளர்கள் குழுவினரின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.
ஏற்கனவே முதல்வர் ஜெயலலிதா தவிர்த்த மற்ற அமைச்சர்கள் அனைவரும் உள்ளிட்ட 52 பேர் கொண்ட குழுவை ஜெயலலிதா அறிவித்திருந்தார். தற்போது மேலும் 9 பேரை அதில் சேர்த்துள்ளார்.
இதுதொடர்பாக ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், ஏற்காடு சட்டசபை தொகுதிக்கு அடுத்த மாதம் (4-ந்தேதி) நடைபெற உள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற் கொள்ளும் வகையில் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள 52 பேர்களுடன்,
53. டாக்டர் சி.விஜய பாஸ்கர் (புதுக்கோட்டை மாவட்ட செயலாளர், மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்)
54. ஏ.அருண்மொழி தேவன் (கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர், தலைவர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம்)
55. மா.ரவிச்சந்திரன், (பெரம்பலூர் மாவட்டச் செயலாளர், தலைவர், தமிழ்நாடு மாநில வேளாண் விற்பனை வரியம்)
56. சொரத்தூர் இரா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., (அனைத்துலக எம்.ஜி. ஆர். மன்ற துணைச் செயலாளர்)
57. எம்.கே.செல்வராஜூ எம்.எல்.ஏ., (சேலம் மாநகர் மாவட்ட செயலாளர்)
58. விஜயலட்சுமி பழனிச்சாமி எம்.எல்.ஏ., (சங்ககிரி சட்டமன்றத் தொகுதி)
59. சி.வி.சண்முகம் எம்.எல்.ஏ., (விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி)
60. இரா.குமரகுரு எம்.எல்.ஏ., (உளுந்தூர்பேட்டை சட்ட மன்ற தொகுதி)
61. எஸ்.கே.செல்வம் எம்.எல்.ஏ., (வீரபாண்டி சட்ட மன்றத் தொகுதி) ஆகியோர் கூடுதல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
அதிமுக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்து ழைப்பு நல்கி சிறப்பான முறையில் தேர்தல் பணியாற்றி, அதிமுக வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications