காத்திருப்போர் பட்டியலில் இருந்த 9 அதிகாரிகள் புதிய பொறுப்புகளுக்கு நியமனம்
சென்னை: காத்திருப்போர் பட்டியிலில் இருந்த ஐ.பிஎஸ் அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகளில் பணி நியமனம் வழங்கி தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன் விவரம்:
ஐ.பி.எஸ். அதிகாரி டி.கே. ராஜேந்திரன் சிறைத்துறை டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக இருந்த திரிபாதி காவல்துறை அமலாக்கப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஐ.பி.எஸ். அதிகாரி மயில்வாகனம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு எஸ்.பி.ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
காவல்துறை கியூ பிரிவு சிஐடி கண்காணிப்பாளராக எஸ்.மகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
காவல்துறை பயிற்சி கல்லூரி கண்காணிப்பாளராக இ.எஸ்.உமா நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்டாய காத்திருப்பில் இருந்த எஸ்.லட்சுமி கோவை சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
குற்றப்பிரிவு சிஐடி போலீஸ் கண்காணிப்பாளராக ஜெ. லோகநாதனை நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு காவல் சிறப்பு படை 7வது பட்டாலியன் கமாண்டன்ட் ஆக சுப்புலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார்.
சேலம் நகர குற்றம் மற்றும் போக்குவரத்து பிரிவு துணை ஆணையராக ராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.