11 மாடி கட்டட விபத்தில் உயிரிழந்தவர்களில் 9 பேரின் அடையாளம் கண்டுபிடிப்பு
சென்னை: சென்னையில் நடந்த 11 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் இறந்த 11 பேரில் 9 பேரின் அடையாளம் தெரிந்து விட்டது.
இவர்களில் 5 பேரின் உடல்கள் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் 6 பேரின் உடல்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.
ராயப்பேட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள உடல்களில் 2 பேரின் உடல்கள் அடையாளம் தெரியவில்லை. மற்ற நால்வரின் அடையாளம் தெரிய வந்துள்ளது.
காயமடைந்த 19 பேர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக அங்கு 150 படுக்கைகள் கொண்ட 2 அவசர வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் அடங்கிய குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர். மீட்கப்பட்டு கொண்டு வரப்படுபவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. காயம் அடைந்தவர்கள் குறித்து அவர்களது உறவினர்களுக்குத் தகவல் அளிப்பதற்காக போரூர் மருத்துவமனையில் மருத்துவ உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளதாக பொதுசுகாதாரத் துறை இயக்குனர் குழந்தைசாமி தெரிவித்தார்.