திருவண்ணாமலை கோயிலில் ட்ரோன் காமிரா.. உக்ரைன் நாட்டுக்காரர்கள் 9 பேர் சிக்கினர்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலை ட்ரோன் காமிரா மூலம் படம்பிடித்த உக்ரைன் நாட்டை சேர்ந்த 9 பேரிடம், சந்தேகத்தின்பேரில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
சிவராத்திரி நெருங்கிவரும் நிலையில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் களை கட்டியுள்ளது. நேற்று தை அமாவாசையை முன்னிட்டு அதிகப்படியான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்திருந்தனர்.

பக்தர்களோடு வந்த உக்ரைன் நாட்டை சேர்ந்த 9 பேரின் நடவடிக்கையில் காவல்துறைக்கு சந்தேகம் வந்தது. அந்த 9 பேரில் 6 பேர் ஆண்கள் எஞ்சியவர்கள் பெண்களாகும்.
ட்ரோன் காமிரா மூலம் படம் பிடிக்க வேண்டுமானால் காவல்துறையிடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் என்பது இந்தியாவிலுள்ள சட்ட நடைமுறை. அதிலும், கோயில்கள் போன்ற முக்கிய இடங்களில் ட்ரோன் காமிராக்களுக்கு அனுமதி தரப்படுவதில்லை.
இந்நிலையில், உக்ரைன் நாட்டுக்காரர்கள் இவ்வாறு, ட்ரோன் காமிராவை பயன்படுத்தி படம் பிடித்துள்ளது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. எனவே, காமிராவில் பதிவான காட்சிகளை காவல்துறை போட்டு பார்த்து வருகிறது.
இதுவரை அந்த நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications