For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பதவி உயர்வு பெற்ற 96 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் டி.எஸ்.பிக்களாக நியமனம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் முழுவதும் பதவி உயர்வு பெற்ற 96 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் துணை போலீஸ் சூப்பிரண்டுகளாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் சமீபத்தில் 96 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் துணை போலீஸ் சூப்பிரண்டுகளாக பதவி உயர்வு பெற்றனர். இதற்கான உத்தரவை அரசு வெளியிட்டது. ஆனால் அவர்கள் துணை போலீஸ் சூப்பிரண்டுகளாக பணி நியமனம் செய்யப்படவில்லை.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பதவி உயர்வு பெற்ற இன்ஸ்பெக்டர்கள் அனைவரும் துணை போலீஸ் சூப்பிரண்டுகளாக பணி நியமனம் செய்யப்பட்டனர்.

சென்னையில் பதவி உயர்வு பெற்ற 20-க்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர்களில் பெரும்பாலான பேர் உதவி கமிஷனர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Ninty six police inspectors who were promoted as DSP's have been appointed in their post.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X