பதவி உயர்வு பெற்ற 96 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் டி.எஸ்.பிக்களாக நியமனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகம் முழுவதும் பதவி உயர்வு பெற்ற 96 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் துணை போலீஸ் சூப்பிரண்டுகளாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் சமீபத்தில் 96 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் துணை போலீஸ் சூப்பிரண்டுகளாக பதவி உயர்வு பெற்றனர். இதற்கான உத்தரவை அரசு வெளியிட்டது. ஆனால் அவர்கள் துணை போலீஸ் சூப்பிரண்டுகளாக பணி நியமனம் செய்யப்படவில்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பதவி உயர்வு பெற்ற இன்ஸ்பெக்டர்கள் அனைவரும் துணை போலீஸ் சூப்பிரண்டுகளாக பணி நியமனம் செய்யப்பட்டனர்.
சென்னையில் பதவி உயர்வு பெற்ற 20-க்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர்களில் பெரும்பாலான பேர் உதவி கமிஷனர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications