இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 99 பேர் விடுதலை
சென்னை: இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 99 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக அவ்வப்போது தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து வருகின்றனர். அப்போது மீனவர்களின் படகுகளும், மீன் பிடி சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
கடந்த மூன்று மாதங்களில் மட்டும் நாகை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த 99 மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அவர்களது 94 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி அவ்வப்போது தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இலங்கையில் நடந்த இந்தியா - இலங்கைக் கூட்டுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது, தமிழக மீனவர் பிரச்சினை உள்பட பொருளாதாரம், வர்த்தகம், கடல்சார் ஒத்துழைப்பு, ராணுவ ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்நிலையில், அதன் தொடர்ச்சியாக இன்று இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 99 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் நாளை அல்லது நாளை மறுதினம் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.
மீனவர்கள் விடுதலை குறித்து மட்டுமே இலங்கை நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், அவர்கள் பறிமுதல் செய்த தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிப்பது குறித்து எதுவும் கூறப்படவில்லை. இதனால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என விடுதலை செய்யப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications