"எனக்கு உங்கள ரொம்ப புடிக்கும் கமல் அங்கிள்"- திருப்பூரில் 4 வயது சிறுமியின் அன்பில் திணறிய கமல்
Recommended Video
திருப்பூர்: எனக்கு உங்களை ரொம்ப புடிக்கும் கமல் அங்கிள் என்று 4 வயது சிறுமி கமலை திணறடித்தார்.
மக்கள் நீதி மய்யம் சார்பில் எல்லப்பாளையம் உள்ளிட்ட 8 கிராமங்களை கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யம் சார்பில் தத்தெடுத்தார். இதையடுத்து நேற்று முன் தினம் அந்த கிராமத்தில் மரக்கன்றுகள் நட்டார்.
இதையடுத்து இளைஞர்கள் கிராமங்களை தேடி வர வேண்டும். அது போல் முன்னேற்றங்களும் கிராமங்களை நோக்கி வர வேண்டும் என்றார். மேலும் இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்றும் தெரிவித்தார்.
"எனக்கு உங்கள ரொம்ப புடிக்கும் கமல் அங்கிள்"- திருப்பூரில் 4 வயது சிறுமியின் அன்பில் திணறிய கமல்
— Oneindia Tamil (@thatsTamil) September 22, 2018
#kamalhaasan pic.twitter.com/yKFSRVMbl9
இந்நிலையில் அவர் திருப்பூரில் பொதுமக்களை இன்று சந்தித்துவிட்டு சென்று கொண்டிருந்தார். அப்போது 4 வயது சிறுமியை அவர் சந்தித்தார். அந்த சிறுமி நான் உங்களை கூப்பிட்டு கொண்டே இருக்கிறேன். நீங்கள் கண்டுக் கொள்ளாமல் போறீங்க என அந்த குழந்தை மழலையில் அழுது கொண்டே சொன்னார்.
அதற்கு கமல்ஹாசனோ காரில் கண்ணாடி மூடியிருக்குல்ல. அதனால் எனக்கு நீ கூப்பிட்டது கேட்கவில்லை என்றார் கமல். அதற்கு அந்த சிறுமி எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் அங்கிள் என்று கூறினார்.
சிறுமியின் அன்பில் திக்குமுக்காடிய கமல் அவருடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தார்.