கிட்ட வந்தால் மொத்த துணிகளை கழட்டி விடுவேன்.. போதையில் 'குடிமகள்' நடுரோட்டில் செய்த அட்டகாசம்
திருப்பத்தூர்: திருப்பத்தூரில் 40வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் குடிபோதையில் போக்குவரத்தை சரி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் புதுப்பேட்டை ரோடு அருகே சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் குடிபோதையில் திடீரென்று சாலையின் நடுவே கையில் செருப்போடு. நின்று அப்பகுதியில் வரும் பேருந்து லாரி கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி போக்குவரத்தை சீர் செய்து உள்ளார்.
உடனே காவல் துறையினர் விரைந்து வந்து அந்த பெண்ணிடம் விசாரித்தபோது மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளாரா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்
எம்ஜிஆர், ஜெ. கட்டி காத்த அதிமுகவை அடியாக்கியாச்சு.. அடுத்து தமிழகம்தானே.. நடக்காது.. ஜோதிமணி தாக்கு
அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் திருப்பத்தூர் அரசு மருத்துமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அந்த பெண்ணை அழைத்துச் செல்ல முயற்சித்தனர் ஆனால் அந்த பெண் கிட்டே வந்தால் மொத்த துணிகளையும் கழட்டி விடுவேன் என்று எச்சரித்தார். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின்பு ஒரு வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அந்த பெண்ணை அழைத்து சென்றுள்ளனர்.
இந்த பெண் எந்த ஊர் எந்த பகுதி என்று தெரியவில்லை மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளாரா? அல்லது என்ன பிரச்சனை? என்பது குறித்து தெரியவில்லை இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்..