12 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 62 வயது முதியவர் கைது
செஞ்சி அருகே 12 வயது சிறுமியை 62 வயது முதியவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்த அந்த முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: செஞ்சி அருகே 12 வயது சிறுமியை 62 வயது முதியவர் ஒருவர் பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவ அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செஞ்சியை அடுத்த ரெட்டியார் பாளையாத்தைச் சேர்ந்தவர் சந்திரன். 62 வயதான இவர் பெரியாம்பூர் என்ற கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இவர் அதேபகுதியைச் சேர்ந்த 7ஆம் வகுப்பு படித்து வரும் 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி நடந்ததை பெற்றோரிடம் கூறி கதறியுள்ளார்.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் முதியவர் சந்திரனை போலீசார் கைது செய்துள்ளனர். 12 வயது சிறுமியை 62 வயது முதியவர் ஒருவர் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications