இவருக்கு 70 வயசு.. 8 வயது சிறுமியை ஏமாற்றி செய்த கேவலமான காரியம்.. இப்ப கம்பி எண்ணுகிறார்
தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே சிறுமியை ஏமாற்றி பாலியல் தொந்தரவு கொடுத்த 70வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
Recommended Video
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே காரிசாத்தான் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவருக்கு 70 வயது ஆகிறது. கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். கணேசன் அடிக்கடி மது அருந்துவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

மது போதையில் இவர் அதே பகுதியில் உள்ள 8 வயது சிறுமிக்கு திண்பண்டங்கள் வாங்கி கொடுத்து ஏமாற்றி பாலியல் தொந்தரவு அளித்திருக்கிறார். இது பற்றி சிறுமி பெற்றோரிடம் கூறியிருக்கிறாள்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட காவல் ஆய்வாளர் சித்ரகலா தலைமையிலான போலீசார் முதியவர் கணேசனை கைது செய்தனர்.
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த காரணத்தால் போக்சோ சட்டத்தின் கீழ் கரிவலம்வந்தநல்லூர் போலீசார் கணேசனை கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்












Click it and Unblock the Notifications