பாகுபலியை பாராட்டிய வைரமுத்து... நெகிழ்ந்த ராஜமெளலி!!
சென்னை: இந்திய சினிமாவின் உலக விலாசமாய் உங்கள் பெயர் பொறிக்கப்படும் என்று பாகுபலி படத்தின் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலிக்கு கவிஞர் வைரமுத்து பாராட்டுக்கடிதம் எழுதியுள்ளார். இதனை தனது டுவிட்டர், ஃபேஸ்புக் பக்கங்களில் பகிர்ந்துள்ள ராஜமௌலி, ஒரு அருமையான ஆசிரியரிடம் இருந்து ஒரு மாணவனுக்குக் கிடைத்த வாழ்த்து இது என்று கூறியுள்ளார்.
பாகுபலி திரைப்படம் இந்திய அளவில் வெற்றி பெற்றுள்ளது. 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை வாரிக்குவித்துள்ள இந்த படம் பற்றிதான் கடந்த ஒருமாதகாலமாக ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பேசி வருகின்றனர். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் என அனைவரும் இந்த படத்தினையும், நடிகர்களையும் நேரில் அழைத்து பாராட்டியுள்ளனர்.

வைரமுத்து வாழ்த்து
பாகுபலி படம் குறித்து இயக்குநர் ராஜமௌலிக்கு கவிஞர் வைரமுத்து பாராட்டு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் இது செல்லுலாய்டில் எழுதப்பட்ட இன்னொரு இதிகாசமா என்று ஆச்சரியம் தெரிவித்துள்ளார்.

கவிஞனைக் கண்டேன்
பட்டாம்பூச்சிகளால் சூழப்பட்ட கனவுப் பெண், பட்டாம்பூச்சிகள் பறந்து போவதைப் போல கலைந்து போனாள் என்று காட்சிப்படுத்தியிருப்பதைப் பார்க்கும் போது உங்களுக்குள் ஒரு கவிஞனைக் கண்டேன்.

கம்பனின் கற்பனை
கட்டப்பா உறையைத் தொட பாகுபலி வாளை உருவ, வெட்டப்பட்ட முண்டம் தொடர்ந்து ஓடும் காட்சியில் கம்பனின் கற்பனையைக் கண்டேன்.

பெருமைப்படுகிறேன்
போர்க்களக் காட்சியின் நேர்த்தி, இந்திய சினிமாவின் உலக விலாசமாய் உங்கள் பெயர் நாளை பொறிக்கப்படும். உங்களைப் பார்த்து நான் பெருமைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.
உலுக்கிய பாராட்டு
|
உலுக்கிய பாராட்டு
அதை தன் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராஜமெளலி, அதைப் பற்றி குறிப்பிடும்போது...பாகுபலி படத்துக்காக எனக்கு நிறைய பாராட்டுகள் கிடைத்துள்ளன. ஆனால், கவிஞர் வைரமுத்துவின் பாராட்டு என்னை உலுக்கிவிட்டது என்று கூறியுள்ளார்.

அருமையான ஆசிரியர்
இந்தப் பாராட்டை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு என்னிடம் தைரியம் இல்லை. ஒரு லெஜண்டிடம் இருந்து வாழ்த்துகளைப் பெறுவதாகவே எண்ணுகிறேன். ஒரு அருமையான ஆசிரியரிடம் இருந்து ஒரு மாணவனுக்குக் கிடைத்த வாழ்த்து இது என்று கூறியுள்ளார்.
-
கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீடம் விருது! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications