Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தூத்துக்குடி கடற்பகுதியில் பலத்த காற்று.. படகு கவிழ்ந்து மீனவர் ஒருவர் பலி!

தூத்துக்குடி கடற்பகுதியில் பலத்த காற்று வீசியதால் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: கடற்பகுதியில் பலத்த காற்று வீசியதால் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மீனவர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.

அண்மையில் வங்கக்கடலில் உருவான ஓகி புயலால் கன்னியாகுமரி, தூத்துக்குடி நெல்லை உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்தன.

A boat drain in sea due to heavy wind in Tuticorin sea: one dead

புயலுக்கு முன்பு கடலுக்கு சென்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 400க்கும் மேற்பட்டோர் இதுவரை கரை திரும்பவில்லை. இதனால் மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்நிலையில் தூத்துக்குடி கடற்பகுதியில் பலத்த காற்று வீசிவருகிறது. தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரத்தில் இருந்து 5 மீனவர்கள் நாட்டுப்படகு ஒன்றில் மீன்பிடிக்க சென்றனர்.

காற்றின் வேகத்தால் நாட்டுப்படகு கடலில் கவிழ்ந்தது. இதில் கென்னடி என்ற மீனவர் கடலில் மூழ்கி பலியானார்.

கடலில் தத்தளித்த மேலும் 4 மீனவர்களை சக மீனவர்கள் மீட்டனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+