For Daily Alerts
Just In
ஆழ்வார்பேட்டை அடுக்குமாடி கட்டிடத்தில் விரிசல் - உள்ளிருந்தவர்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றம்
சென்னை: ஆழ்வார்பேட்டை லஸ்சர்ஜ்ஸ் சாலையில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் இடைவிடாது பெய்த கனமழையால் சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கிறது.
இந்நிலையில் குடியிருப்புகளில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பும் மழையால் கேள்விக்குறியாகியுள்ளது. பல்வேறு கட்டிடங்கள் மழை நீரில் நனைந்து ஆட்டம் கண்டு வருகின்றன.
இந்நிலையில் ஆழ்வார்பேட்டையில் ஆஞ்சநேயர் கோவில் அருகில் அமைந்துள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்று விரிசலால் நிலத்தில் ஒரு அடி இறங்கியதாக அப்பகுதி குடியிருப்புவாசிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அடுக்குமாடி கட்டடத்தில் இருந்தவர்கள் மீட்புக் குழுவினர் மூலமாக பாதுகாப்புக் கருதி வெளியேற்றப்பட்டனர்.
Comments
English summary
People evacuated from alwarpet building thereby a crack in it due to rain.
Story first published: Wednesday, November 18, 2015, 8:42 [IST]