For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிருஷ்ணகிரி அருகே குடிபோதையில் எரிந்து கொண்டிருந்த குப்பைக்குள் விழுந்தவர் பலி

By Siva
Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி: குடிபோதையில் சாலையோரம் எரிந்து கொண்டிந்த குப்பைக்குள் விழுந்தவர் உடல் கருகி பரிதாபமாக உயிர் இழந்தார்.

கிருஷ்ணகிரி அருகே உள்ள பெரியமுத்தூரைச் சேர்ந்தவர் பெரியசாமி. அவரது மகன் சுப்ரமணி(34) கிருஷ்ணகிரியில் உள்ள போட்டோ ஸ்டுடியோ ஒன்றில் வேலை பார்த்தார்.

கடந்த 17ம் தேதி இரவு சுப்ரமணி மது குடித்துவிட்டு போதையில் பைக்கில் பெரியமுத்தூரில் உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். தூரகாபுரி என்ற கிராமத்தில் உள்ள தனியார் பள்ளி அருகே அவர் சென்று கொண்டிருக்கையில் நிலைதடுமாறினார். இதையடுத்து அவர் சாலையோரத்தில் எரிந்து கொண்டிருந்த குப்பைக்குள் விழுந்தார்.

எரிந்து கொண்டிருந்த குப்பைக்குள் விழுந்த அவரை வெளியே எடுக்க நீண்ட நேரம் ஆனது. அதற்குள் அவருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. உடனே அவரை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

English summary
A 34-year old drunkard fell into a burning garbage heap and lost his life near Krishnagiri.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X