சென்னை கர்நாடக இசை நிகழ்ச்சியில் பங்கேற்கும் துபாய் தமிழ் மாணவி!
சென்னையில் நாளை நடைபெறும் கர்நாடக இசை நிகழ்ச்சியில் துபாய் தமிழ் மாணவி ஒருவர் பங்கேற்கவுள்ளார்.
சென்னை: நாளை நடைபெறும் கர்நாடக இசை நிகழ்ச்சியில் துபாய் தமிழ் மாணவி குமாரி எஸ். சௌம்யலட்சுமி பங்கேற்கவுள்ளார்.
சென்னை நந்திகேஸ்வர் தாஸ் வித்யாலயா மற்றும் சிஸ்யாஸ் ஆகிய அமைப்புகளின் சார்பில் இளம் கர்நாடக இசைக்கலைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அரங்கிசை என்ற முதலாவது இளைஞர் திருவிழா வரும் 01.07.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 9 மணி வரை சென்னை குரோம்பேட்டை ராதா நகர் கிருஷ்ணமாச்சாரி தெருவில் அமைந்துள்ள வசந்த மண்டபத்தில் நடக்க இருக்கிறது.

இந்த விழாவுக்கு சென்னை குயின் மேரிஸ் கல்லூரி இசைத்துறையின் ஓய்வு பெற்ற தலைவர் டாக்டர் எம்.ஏ. பாகீரதி தலைமை வகிக்க இருக்கிறார்.சிறப்பு விருந்தினர்களாக SRDFVV பில்டிங் கமிட்டியின் தலைவர் லயன் ஸ்ரீ சி.ஆர். நரசிம்மன், SRSS சபாவின் தலைவர் ஸ்ரீ கே.எஸ். சௌம்யநாராயணன் ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர்.

இந்த விழாவில் துபாயில் பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுக்களை பெற்ற தமிழ் மாணவி குமாரி எஸ். சௌம்யலட்சுமியின் கர்நாடக இசை நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு நடக்க இருக்கிறது. அதில் பகால ஜெயபிரகாஷ் வயலினும், கே.பி. அர்ஜுன் சுந்தரம் மிருதங்கமும், திருவாரூர் கே. வெங்கடேஷ் கடமும் வாசிக்க இருக்கின்றனர்.தில்லைஸ்தானம் சகோதரிகளான திருமதி வர்தினி பரணீதரன் மற்றும் செல்வி வர்ஷினி சூரியநாராயணன் ஆகியோரும் கர்நாடக இசை நிகழ்ச்சியினை வழங்குகின்றனர்.

மேலும் இளம் இசைக்கலைஞர்கள் பலர் காலை முதல் மாலை வரை இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று தங்களது இசைத் திறமையை வெளிப்படுத்த இருக்கின்றனர்.
இந்த விழாவில் இசைப் பிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த விழா குறித்து மிருதங்க வித்வான் தில்லைஸ்தானம் ஆர். சூரியநாராயணனை 94448 13586 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு மேலும் விபரம் பெறலாம்.












Click it and Unblock the Notifications