செங்கல்பட்டை உலுக்கிய கோர விபத்து.. அதிகாலையில் கேட்ட சத்தம்.. பதறி போய் பார்த்தால் ஷாக்

Subscribe to Oneindia Tamil

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் மிகப்பெரிய சாலை விபத்து ஏற்பட்டு உள்ளது. சாலை விபத்தில் 4 பேர் பலியானதால் அங்கே மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

அடுத்தடுத்து வாகனங்கள் சரமாரியாக ஜிஎஸ்டி சாலையில் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. செங்கல்பட்டு அருகே சென்னை நோக்கி வந்த லாரி, ஆம்னி பேருந்து, அரசுப் பேருந்து மோதியது.

A huge accident at Chengalpattu 4 vehicles tangled with each other

முதலில் லாரி வேகமாக கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பேருந்து மீது மோதி உள்ளது. அரசு சொகுசு பேருந்து மீது லாரி மோதிய நிலையில் அந்த சொகுசு பேருந்து மீது அரசு சாதாரண பேருந்து பின்பக்கம் மோதி உள்ளது.

இதையடுத்து லாரியின் பின் பக்கம் தனியார் ஆம்னி பேருந்து மோதி உள்ளது. அங்கே சுமை ஏற்றி வந்த அந்த லாரி பிரேக் பிடிக்க முடியாமல் வேகமாக கட்டுப்பாட்டை இழந்து தனக்கு முன்னால் வந்த பேருந்தில் முதலில் மோதியது.

இதையடுத்து இரண்டு பக்கமும் பின்னால் வந்த வாகனங்கள் அடுத்தடுத்து மோதி பெரிய விபத்து ஏற்பட்டு உள்ளது. இப்படித்தான் மொத்த விபத்தும் ஏற்பட்டு உள்ளது. அந்த லாரி அதிக சுமை ஏற்றி வந்து பிரேக் பெயிலியர் ஆனதே விபத்திற்கு காரணம்.

பழமத்தூரில் இந்த விபத்து நடந்து உள்ளது. செங்கல்பட்டு அருகே உள்ள பழமத்தூரில் உள்ள சாலை முக்கியமான சாலை ஆகும். தென் தமிழ்நாட்டை வடதமிழ்நாட்டோடு இணைக்கும் முக்கியமான சாலைகளில் ஒன்று ஆகும் இது.

இந்த சாலை வழியாக சென்னை செல்பவர்கள் அதிகம் பயணிப்பது வழக்கம். அதேபோல் சென்னையில் இருந்து மதுரை, கன்னியாகுமரி, நெல்லை, கேரளாவில் திருவனந்தபுரம் போன்ற பகுதிகளுக்கு செல்பவர்களும் அதிகம் பயணிப்பது வழக்கம். இப்படிப்பட்ட சாலையில்தான் விபத்து ஏற்பட்டு உள்ளது.

இந்த சாலை இரவு நேரத்திலும் தீவிர பிசியாக இருக்கும் பாலம் ஆகும். அதிக அளவில் இந்த சாலையில் வாகனங்கள் செல்வது வழக்கம்.

விபத்து: இந்த பிஸியான சாலையில்தான் இன்று விபத்து ஏற்பட்டு உள்ளது. அதிகாலையில் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது, பனிமூட்டம் காரணமாக டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. லாரிதான் முதலில் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

ஒன்றன்பின் ஒன்று மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+