கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவி.. மச்சானுடன் சென்று கத்தியால் குத்திய கணவர்..!!
காஞ்சிபுரம் அருகே கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவியை கணவரும் மச்சானும் சேர்ந்து கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவியை கணவரும் மச்சானும் சேர்ந்து கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம், காந்தி சாலையை சேர்ந்தவர் பாலாஜி. 38 வயதான இவருக்கு ரவுடித்தனம் செய்வதே தொழில். இவர் மேல் பல்வேறு கொலை கொள்ளை வழக்குகள் உள்ளன.
இவருக்கு 22 வயதில் வனிதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வனிதாவின் கணவர் பாலாஜியை கொலை வழக்கில் போலீசார் கைது செய்தனர்.

தனிமையில் வாடிய வனிதா
இதைத்தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் தனிமையில் வாடிய வனிதாவை இளமையும் சேர்ந்து வாட்டியது.

கம்பெனி கொடுத்த கணபதி
அப்போது வனிதாவின் தனிமைக்கு கம்பெனி கொடுத்தார் டிராவல்ஸ் அதிபரான கணபதி. இவர்களுக்குள் முதலில் நட்பாக ஏற்பட்ட பழக்கம் பின்னர் கள்ளக்காதலாக மாறியது.

எஸ்கேப்பான ஜோடி
பாலாஜி சிறையில் இருப்பதை கச்சிதமாக பயன்படுத்திக்கொண்ட இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்தனர். இனிமேலும் உள்ளூரில் இருந்தால் ஆபத்து என்று எண்ணி கள்ளக்காதல் ஜோடி வீட்டை விட்டு எஸ்கேப்பானது.

எகிறிய ஆத்திரம்
அப்போது தான் சிறையில் இருந்து வெளியே வந்தார் பாலாஜி. பாலாஜிக்கு அவர்களது கள்ளக்காதல் விவகாரம் தெரிந்தது. ஏற்கனவே கோபாக்காரரான பாலாஜி மனைவி வேறு ஒருவருடன் ஓடிப்போனதை அறித்து ஆத்திரத்தின் உச்சிக்கு சென்றார்.

இரவு பகலாக தேடுதல் வேட்டை
இதையடுத்து, வனிதாவின் தம்பி அஜீத்துடன் சேர்ந்து தேடுதல் வேட்டையை தொடங்கினார் கணவர் பாலாஜி. பாலாஜியும் அவரது மைத்துனரும் சேர்ந்து வனிதாவையும் அவரது கள்ளக்காதலனையும் இரவு பகலாக தேடினர்.

கத்தியால் சரமாரி குத்து
இந்நிலையில், கள்ளக்காதல் ஜோடி இரும்புலியூரில் தங்கி குடும்பம் நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு இரும்புலியூரில் தங்கி இருந்த 2 பேரையும் கத்தியால் குத்தினர் பாலாஜியும் அஜித்தும். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து அவர்கள் தப்பினர்.

கணவர் தம்பிக்கு வலை
தகவலறிந்து, சேலையூர் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, 2 பேரையும் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய பாலாஜி, அஜித் ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications