திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றினார்.. எம்பி மகன் மீது பெண் பரபரப்பு புகார்
அதிமுக எம்பி அன்வர் ராஜாவின் மகன் நாசர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் புகார் கூறியுள்ளார்.
Recommended Video

சென்னை: அதிமுக எம்பி அன்வர் ராஜாவின் மகன் நாசர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் புகார் கூறியுள்ளார்.
அதிமுக எம்பியாக இருப்பவர் அன்வர் ராஜா. இவரது மகன் நாசர் மீது சென்னையை சேர்ந்த பிரபல்லா என்ற பெண் போலீஸில் பரபரப்பு புகார் கூறியுள்ளார்.

அதாவது, நாசர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி 3 மாதம் குடும்பம் நடத்திவிட்டு ஏமாற்றிவிட்டதாக கூறியுள்ளார். மேலும் தன்னிடம் இருந்து 50 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை அடகு வைத்து கடன் கொடுத்திருப்பதாகவும் அந்த பெண் கூறினார்.

தன்னுடன் குடும்பம் நடத்திவிட்டு தனது பணத்தை ஏமாற்றிவிட்டு தற்போது வேறு ஒரு பெண்ணை நாசர் திருமணம் செய்யவுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டால் நாசரும் அவரது தந்தை அன்வர் ராஜாவும் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் பிரபல்லா கண்ணீருடன் புகார் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications