குன்னூர்: தீபாவளி பட்டாசுகளால் வீட்டில் பதுங்கிய சிறுத்தை- 18 மணி நேரத்துக்குப் பின் திகில் வீடியோ!
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் 6 பேரை தாக்கி வீட்டுக்குள் பதுங்கிய சிறுத்தை 18 மணிநேரத்துக்கு பின் வெளியே வந்த திகில் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் புரூக்லேண்ட் பகுதியில் பொதுமக்களால் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வந்தது. அப்போது சிறுத்தை ஒன்று நாயை பிடிப்பதற்காக குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. அந்த நேரத்தில் திடீரென பட்டாசு வெடி சப்தம் கேட்டதால் அலறிய சிறுத்தை வீடு ஒன்றுக்குள் புகுந்து கொண்டது. இதனைப் பார்த்த பொதுமக்கள் அச்சத்தில் உறைந்தனர்.

இது குறித்து வனத்துறையினருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. வீட்டுக்குள் நுழைந்து பதுங்கிய சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டனர். இந்த முயற்சியில் 6 வனத்துறை அதிகாரிகள் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் குன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் சிசிடி கேமராக்கள் மூலம் சிறுத்தையை கண்காணிக்க தொடங்கிய வனத்துறை அதிகாரிகள் வெளியே காத்திருந்தனர். சுமார் 18 மணிநேரமாகியும் சிறுத்தை வெளியே வராததால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கவும் வனத்துறையினர் தயாராக இருந்தனர். மேலும் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே சிறுத்தையின் நடமாட்டத்தையும் வனத்துறையினர் கண்காணித்தனர்.
#WATCH | Tamil Nadu: A leopard entered a house in the Coonoor's Brooklands area, in Nilgiri, yesterday morning and attacked 6 people. The leopard stayed for more than 15 hours inside the house and escaped late on Sunday. https://t.co/LiQq4fk599 pic.twitter.com/4x5REMaKv6
— ANI (@ANI) November 13, 2023
அப்போது நேற்று இரவு திடீரென வீட்டில் இருந்து சிறுத்தை மெல்ல வெளியே தலைகாட்டி வெளியேறியது. இதனையடுத்து அங்கிருந்து தப்பி ஓடிய சிறுத்தை வனப்பகுதிக்குள் நுழைந்தது. இந்த வீடியோ காட்சிகளை வனத்துறையினர் தற்போது வெளியிட்டுள்ளனர். இது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் டி.வெங்கடேஷ் கூறுகையில், புரூக்லேண்ட் வனப்பகுதியில் நடமாடிய சிறுத்தை அதிகாலையில் சிறுத்தை நாயை விரட்டியபடி வீடு ஒன்றுக்குள் நுழநிதது. இந்த தகவல் கிடைத்ததும் அப்பகுதிக்கு சென்று சிறுத்தையை வெளியேற்ற அதிகாரிகள் முயற்சித்தனர். ஆனால் சிறுத்தை மூர்க்கமாக தாக்கியதில் அதிகாரிகள் படுகாயமடைந்தனர். இதனால் அதிகாரிகள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அந்த வீடு கண்காணிக்கப்பட்டது. தொடர்ச்சியாக பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால் சிறுத்தை வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே பதுங்கி இருந்தது. பட்டாசு சப்தங்கள் ஓய்ந்த நிலையில் நேற்று இரவு சிறுத்தை தானாகவே வெளியேறியது என்றார்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications