கூண்டு வைத்தும் சிக்காத சிறுத்தை: வெளியே நடமாட பொதுமக்கள் அச்சம்
நெல்லை அருகே சுற்றித்திரியும் சிறுத்தை கூண்டில் சிக்காததால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர். சிறுத்தையின் நடமாட்டத்தால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சுகின்றனர்.
நெல்லை: நெல்லை அருகே கூண்டு வைத்தும் சிறுத்தை சிக்காததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். ஆடுகளை கடித்துக் குதறும் சிறுத்தையால் மக்கள் இரவு நேரங்களில் வெளியே வரமுடியாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.
நெல்லை மாவட்டம் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் கடனா அணை பகுதி உள்ளது. அந்த பகுதியில் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் சுமார் ஒராண்டுக்கும் மேலாக காட்டு விலங்குகள் கிராம பகுதியில் புகுந்து பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதில் கூண்டடு வைத்து இதுவரை 5 சிறுத்தைகள் பிடிக்கப்பட்டன.
இரவில் வலம் வரும் சிறுத்தை
ஆனால் காட்டு விலங்குகள் ஊருக்குள் வருவது குறைந்தபாடில்லை. இந்நிலையில் பெத்தன்விளை பகுதியை சேர்ந்த இசக்கி என்பவர் ஆட்டு பண்ணை வைத்திருக்கிறார். நள்ளிரவில் ஆடுகள் கத்துவதை கேட்ட அவர் வெளியே வந்து பார்த்தார்.
ஆட்டைக் கடித்து குதறும் சிறுத்தை
அங்கு சிறுத்தை ஆட்டை கடித்து குதறிக் கொண்டிருந்தது. இதை பார்த்து அதிர்ந்த அவர் டார்ச் லைட்டை சிறுத்தை முகத்தில் அடித்ததால் மிரண்ட சிறுத்தை காட்டுக்குள் ஓட்டம் பிடித்தது.
6அடி சுவரை தாண்டும் சிறுத்தை
காட்டு விலங்குகள் அட்டகாசம் இருப்பதால் இவர் தனது வீட்டு சுற்று சுவர் சுமார் 6 அடி உயரம் வரை கட்டியுள்ளார். உள்ளே தான் பண்ணை உள்ளது. அப்படி இருந்தும் சிறுத்தை எவ்வித சிரமும் இல்லாமல் தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போக்கு காட்டும் சிறுத்தை - மக்கள் அச்சம்
தொடர்ந்து சிறுத்தை ஊருக்குள் வருவதால் வனத்துறையினர் அதனை பிடிக்க கூண்டு வைத்தனர். ஆனால் சிறுத்தை சிக்காமல் போக்கு காட்டி வருவதால் பொதுமக்கள் ஆள் நடமாட்டம் இல்லாத சமயத்தில் வெளியே வரவே அஞ்சுகின்றனர்.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications