கிருஷ்ணகிரியில் சொகுசு கார் மோதி முதியவர் பலி.. சாலையை கடக்க முயன்றபோது பரிதாபம்.. ஓட்டுனர் கைது
சாலையை கடக்க முயன்ற முதியவர் சொகுசு கார் மோதி உயிரிழந்தார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

கிருஷ்ணகிரியில் சொகுசு கார் மோதி முதியவர் பலி-வீடியோ
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
கிருஷ்ணகிரி அடுத்த செல்லாண்டி நகர் பகுதியை சேர்ந்தவர் மக்பூல். 70 வயது முதியவரான இவர் கிருஷ்ணகிரி - இராயகோட்டை மேம்பாலம் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார்.

அப்போது சென்னையில் இருந்து பெங்களூருக்கு அதிவேகமாக சென்று கொண்டிருந்த சொகுசு கார் அந்த முதியவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த கிருஷ்ணகிரி தாலுகா காவல்நிலை போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். சொகுசு காரை அதிவேகமாக ஓட்டிவந்த சென்னையை சேர்ந்த சுரேஷ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.













Click it and Unblock the Notifications