தங்கையின் 15 வயது மகளை கற்பழித்த தாய்மாமன்.. 10 ஆண்டு ஜெயில் .. பரபரப்பு தீர்ப்பு!

தங்கையின் 15 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த தாய்மாமனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் தங்கையின் 15 வயது மகளை பலாத்காரம் செய்த தாய்மாமனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 5 ஆயிரம் ரூபாய் அபாரதம் விதித்தும் மகளிர் கோர்ட் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சென்னையை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் தனது மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்துவிட்டு தன் தங்கையின் வீட்டிற்கு சென்றுவிடுவார். கடந்த 2014ஆம் ஆண்டு ஸ்ரீதர் தனது மனைவியுடன் சண்டைபோட்டுவிட்டு தங்கை வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது அவரது 15 வயது மகளை அவர் மிரட்டி கற்பழித்துள்ளார். இதுகுறித்து வெளியே சொல்லக்கூடாது என்றும் மிரட்டியிருக்கிறார்.

மிரட்டி கற்பழிப்பு

மிரட்டி கற்பழிப்பு

இந்நிலையில் சிறுமி கர்ப்பம் அடைந்ததார். அவரிடம் பெற்றோர் விசாரித்ததில் ஸ்ரீதர் கற்பழித்ததும் வெளியே சொல்லக்கூடாது என மிரட்டியதும் தெரியவந்தது.

வழக்கு விசாரணை

வழக்கு விசாரணை

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

ஆண் குழந்தை பிறந்தது

ஆண் குழந்தை பிறந்தது

இந்நிலையில் அந்த சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. வழக்கை விசாரித்த மகளிர் நீதிமன்ற நீதிபதி கலைமதி நேற்று தீர்ப்பளித்தார்.

10 ஆண்டுகள் சிறை

10 ஆண்டுகள் சிறை

அதில், "ஸ்ரீதர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.
எனவே, அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கிறேன்.

தமிழக அரசுக்கு உத்தரவு

தமிழக அரசுக்கு உத்தரவு

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, பாலியல் கொடுமையில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின்படி ரூ.2 லட்சத்தை தமிழக அரசு இழப்பீடாக வழங்கவேண்டும்" என்று தீர்ப்பளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+