சென்னை வளசரவாக்கத்தில் தொப்புள் கொடியை கூட அறுக்காமல் கழிவுநீர் குழாயில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை
சென்னை வளசரவாக்கத்தில் தொப்புள் கொடியை கூட அறுக்காமல் பச்சிளம் ஆண் குழந்தை கழிவுநீர் குழாயில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

சென்னை: வளசரவாக்கத்தில் தொப்புள் கொடியை கூட அறுக்காமல் பச்சிளம் ஆண் குழந்தை கழிவுநீர் குழாயில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வளசரவாக்கம் எஸ்விஎஸ் நகரில் உள்ள கழிவு நீர் குழாயை சில பூனைகள் சுற்றி வந்தன. இதனைக்கண்ட அப்பகுதி பால்காரர் அந்த இடத்தில் என்ன இருக்கிறது என குனிந்து பார்த்தார்.

அப்போது அங்கு ஒரு பச்சிளம் குழந்தை கிடப்பதை பார்த்த அவர் கத்தி கூச்சலிட்டார். இதையடுத்து அருகில் வசிக்கும் பெண் ஒருவர் ஓடி வந்து கழிவு நீர் குழாயில் இருந்த குழந்தையை மீட்டார்.
தொப்புள் கொடியை கூட அறுக்காமல் ஆண் குழந்தை வீசப்பட்டுள்ளது. குழந்தையை மீட்ட அந்த பெண், அந்த குழந்தைக்கு சுதந்திரம் என பெயர் வைத்துள்ளார்.
குழந்தை எழும்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் குழந்தையை வீசிச்சென்றவர்கள் யார் என்பது குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications