ப்ளூ டூத்தெல்லாம் ஜூஜுபி.. "பிட்" அடிப்பதில் பட்டையைக் கிளப்பும் புது டெக்னாலஜி!
காப்பி அடித்து மாட்டிக் கொண்ட மாணவனிடமிருந்து கைப்பற்றப்பட்ட நவீன காப்பி அடிக்கும் பரீட்சை அட்டை பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
Recommended Video

சென்னை: தேர்வு சமயங்களில் காப்பியடிக்க ஏதுவாக உருவாக்கப்பட்ட நவீன காப்பி அடிக்கும் பரீட்டை அட்டை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்திலும் நவீனமயத்தை நோக்கி இந்த உலகம் செல்கிறது. செங்கல் போன்றிருந்த போன்களில் இருந்து தற்போது வாட்ச் வடிவத்திலான போன் வரை அனைத்திலும் புதுமை புகுந்து விட்டது.

இவற்றை நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்திக் கொள்வதற்காகவே விஞ்ஞானிகள் இரவும் பகலும் பாடுபட்டு கண்டறிகின்றனர். ஆனால் சிலர் அந்த டெக்னாலஜியை கொண்டு "கேப்மாறி"த்தனமான செயல்களில் ஈடுபடுகின்றனர்.
நவீன டெக்னாலஜிகளை கொண்டு காப்பியடிப்பதை சினிமாக்களில் பார்த்துள்ளோம். புத்தகத்தை வைத்து காப்பியடிப்பது, துண்டுச்சீட்டு வைத்து காப்பியடிப்பது, ஆள்மாறாட்டம் செய்வது முதல் ப்ளூடூத் மூலம் காப்பியடிப்பது வரை தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளது.
இந்த நிலையில் ஒரு தேர்வில் காப்பி அடித்துக் கொண்டிருந்த மாணவனிடமிருந்து கைப்பற்றப்பட்ட தேர்வு எழுதும் அட்டை அதிர வைத்துள்ளது. ஒரு செல்போனை அட்டைக்குள் பதித்து டச் போன் டெக்னாலஜி மூலம் கேள்விகளுக்கான விடைகள் அதில் ஸ்கேன் செய்து பதிந்து வைத்து அதிர வைத்துள்ளனர்.
இந்த நாடு எங்கே செல்கிறது .. இளைஞர்களின் கையில் பாரதம் என்ற கனவு என்னவாகுமோ என்ற பதற்றமும் எழுகிறது இதைப் பார்த்தால்!












Click it and Unblock the Notifications