144 தடை உத்தரவு அமலில் உள்ள சென்னை மெரினாவில் வட மாநில இளைஞர் குத்தி கொலை... அதிர்ச்சி
சென்னை மெரினாவில் வட மாநில இளைஞர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: சென்னை மெரினாவில் வடமாநில இளைஞர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். 144 தடை ஆணை அமலில் உள்ள நிலையில் கொலை நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். இதனால் பெரும் வன்முறை ஏற்பட்டது.
இதையடுத்து மெரினாவில் மீண்டும் கூடி மாணவர்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்போவதாக போலிசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாணவர்கள் கூடுவதை தடுக்கும் வகையில் மெரினாவில் 144 தடை ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த தடை உத்தரவு வரும் 12ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வடமாநில இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கொலை செய்யப்பட்ட இளைஞர் யார்? எதற்காக கொல்லப்பட்டார் என விசாரித்து வருகின்றனர். மெரினாவில் 144 தடை உத்தரவு உள்ள நிலையில் இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.