மேலும் ஒரு தமிழக அரசுப் பேருந்தில் ஓட்டை... செருப்பு மட்டும் கீழே விழுந்ததால் தப்பிய பயணி
விழுப்புரம் : சென்னையிலிருந்து கள்ளக்குறிச்சி நோக்கிச் சென்ற பேருந்தில் இருந்த ஓட்டை வழியே பயணியின் செருப்பு மட்டும் விழுந்ததையடுத்து சக பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் இயங்கும் அரசு பேருந்துகள் முறையாக பராமரிக்காமல் ஓட்டை உடைசலுடன் இயங்கி வருவதால் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.

நெல்லை அருகே அரசுப் பேருந்தின் ஓட்டை வழியே சாலையில் விழுந்து ஸ்வாதி என்ற பெண் அதிர்ஷ்டவசமாக காயத்துடன் உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் இருந்து விழுப்புரம், திருக்கோவிலூர் வழியாக நேற்று கள்ளக்குறிச்சிக்கு அரசு பேருந்து சென்றது. இதில் சுமார் 40 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். அப்போது பேருந்தின் பின் படிக்கெட்டில் ஓட்டை இருந்ததை கண்ட பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். அந்த ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவரின் செருப்பு சாலையில் விழுந்துவிட்டது.
இதனால் பயணிகள் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே, விழுப்புரம் பேருந்து நிலையத்திற்கு பேருந்து வந்ததும் திடீரென பேருந்து ஓட்டுனர், நடத்துனரிடம் பயணிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த விழுப்புரம் பேருந்து நிலைய மேலாளர், பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் மாற்று பேருந்து வரவழைக்கப்பட்டு அதில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து ஓட்டை விழுந்த பேருந்து பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
தமிழக அரசு பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக பெண் விழுந்த சம்பவத்துக்குப் பிறகும் போக்குவரத்துக் கழகங்களின் அலட்சியம் காரணமாக ஓட்டை உடைசலுடன் கூடிய பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படுவது பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications