கள்ளக்காதலை கைவிடாத மாமாவை அடித்துக்கொன்ற தங்கை மகன்.. சென்னை அம்பத்தூரில் பரபரப்பு
கள்ளக்காதலை கைவிடாத தாய் மாமாவை தங்கை மகனே அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
சென்னை: கள்ளக்காதலை கைவிடாத தாய் மாமாவை தங்கை மகனே அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அம்பத்தூரை அடுத்த கொரட்டூர், பாரதி நகரை சேர்ந்தவர் மூர்த்தி. 58 வயதான இவர் கூலித்தொழிலாளியாக உள்ளார்.
இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக, இறந்துவிட்டார். இவரது மகள் சுந்தரி திருமணமாகி கணவருடன் ஆவடியில் வசித்து வருகிறார்.
மாமா மூர்த்தி
மூர்த்தியின் தங்கை மகன் பாலாஜி. 34 வயதான இவர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். பாடியில் வசித்து வரும் இவர் தனது மாமா மூர்த்தி வீட்டிற்கு சென்றுள்ளார்.
கள்ளக்காதல்
பின்னர் இருவரும் சேர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது, போதை ஏறியதும் பாலாஜி மூர்த்தியிடம், உனக்கும், ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதாக சொல்கிறார்களே. இந்த வயதில் உனக்கு தேவைதானா என கேட்டுள்ளார்.
சரமாரி தாக்குதல்
இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பாலாஜி தனது மாமா மூர்த்தியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த மூர்த்தி நேற்றிரவு 8 மணியாகியும் எழுந்திரிக்கவேயில்லை என தெரிகிறது.
ஆம்புலன்ஸ்க்கு தகவல்
இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்க வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மூர்த்தியை பரிசோதித்து பார்த்துள்ளனர்.
உயிரிழந்த மூர்த்தி
அப்போது மூர்த்தி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறிய அவர்கள், கொரட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணை
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பாலாஜியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.